search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளத்தில் பதிவு"

    • சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
    • முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்களை சுற்றுலா துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் சுற்றுலா துறையின் இணையதளத்தில் கேட்டுள்ள விபரங்கள், உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    முறையாக பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா தொழில் நிறுவனங்களில் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து தேனி கர்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பஸ்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    • பயிர்சாகுபடி குறித்து பதிவு செய்யப்படுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-

    விவசாயிகளின் விவரங்களுக்கு http://www. agrimark.tn.gov.in என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் கீழ் உள்ள இணையதளத் தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் இந்த இணையதளத்தில், அனைத்து சாகுபடி நிலவிவ ரங்களுடன் இணைக்கப் பட்ட விவசாயிகளின் விவரம், நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல், பயிர்சாகுபடி போன்ற அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.

    இதில் வருவாய்த்துறை, வேளாண்மை, தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, வேளாண் பொறியியல், உணவு வழங்கல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, விதைச்சான்றளிப்பு மற்றும் சர்க்கரை ஆகிய துறைகள் இணைக்கப்பட உள்ளன.

    இத்தளத்தில் பதிவு செய்வ தன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பயனாளி யின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக செல்லும்.இத்திட்டம் ஒற்றை சாளர தளமாக செயல்படுகிறது. ஒரே இடத்தில் பதிவு செய்வ தன் மூலம் விவசாயம் குறித்த அனைத்து துறைகளாலும் விவசாயிகளுக்கு தேவைப் படும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். ஒவ்வொரு முறையும் தனி யாக ஆவணங்கள் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

    இதுவரை அரசிடம் இருந்து பெற்றபயன்களை இனிமேல் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ள லாம்.

    ஆதார்எண், அலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் விவசாயிகள் இணைக்கவேண்டும். மேலும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் நிலப் பட்டா ஆவண நகலுடன் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக் கலை அலுவலரிடம் ஆவண நகல்களை ஒப்படைத்து இணையதளத்தில் தங்களது விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×